கடந்த எட்டு ஆண்டுகளாக நாச்சியார் கோவில் பகுதியில் 8 குளங்கள் காணாமல் போய் உள்ளது.
அது தொடர்பாக 8 ஆண்டுகளாக அரசுக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை மனுக்களை மாலையாக அணிந்து தேசியக் கொடியுடன் கும்பகோணத்தில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்திற்கு வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில், திருநறையூர், சமர்த்தனார்குடி, போன்ற இடங்களில் இருந்த எட்டு குளங்கள் கடந்த சில ஆண்டுகளாக காணாமல் போய்விட்டது எனவும், இது தொடர்பாக 8 ஆண்டுகளாக அரசிடம் வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்களை மாலையாக அணிந்து, சட்டை இன்றி கும்பகோணத்தில் இன்று நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வந்த கோவிந்த வல்லப பந்த் என்ற சமூக ஆர்வலரின் செயல் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…