கோடைகால விடுமுறை கூட்ட நெரிசலை தவிர்க்க நெல்லையில் இருந்து தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக மேட்டுப்பாளையத்துக்கு வியாழக்கிழமைதோறும் வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 21-ந்தேதி முதல் ஜூன் 30-ந்தேதி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரெயில் வியாழக்கிழமைதோறும் நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.
மறுமார்க்கத்தில் மேட்டுப்பாளையம் - நெல்லை இடையே வெள்ளிக்கிழமைதோறும் வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 22-ந்தேதி முதல் ஜூலை 1-ந்தேதி வரை இயக்கப்படுகிறது. இந்த ரெயில் வெள்ளிக்கிழமைதோறும் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.45 மணிக்கு நெல்லை வந்தடையும். இந்த ரெயில்கள் சேரன்மாதேவி, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கோவை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…