Tirunelveli District : நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் உடைத்து எடுத்த கற்களை லாரிகள் மூலம் எம் சாண்ட் தயாரிக்கும் பகுதிக்கு எடுத்துச்செல்லிம் பணியில் தொழிலாளர் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
விபத்து
அப்போது நள்ளிரவில் எதிர்பாராதவிதமாக ராட்சச பாறை சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், தொழிலாளர்கள் 6 பேர் 300 அடி பள்ளத்தில் சிக்கினர். இதுகுறித்து தகவலறிந்த முன்னீர்பள்ளம் காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த சரிவில் 3 ஜேசிபி இயந்திரம் மற்றும் 2லாரிகள் சிக்கியுள்ளது.
3 தொழிலாளிகள் பலி
கல்குவாரியில் ராட்சச பாறை விழுந்த இடத்தில் ஆறு தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். இந்நிலையில், இதில் இரண்டு பேரை மீட்டனர். மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளி கூறியதால் 3பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மீட்புப்பணி
கல்குவாரியில் தற்போது மழை பெய்து வருவதால் பள்ளத்தில் மண்சரிவு மற்றும் கற்கள் விழுகிறது. இதனால் மீட்புப்பணியின் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து மிகப்பெரிய கிரேன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட உள்ளது. அவற்றின் மூலம் மீட்புப்பணியை எளிதாக்கும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகிறனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்புடன் கானப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…