உளுந்தூர்பேட்டையில் நகைக்கடையில் கவரிங் நகைகளை கொடுத்து தங்க நகைகளை எடுத்துச் சென்ற 2 பெண்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில், உளுந்தூர்பேட்டையில் நந்தகுமார் என்பவருக்கு சொந்தமான நகை கடைக்கு வந்த இருவர் தாங்கள் கொண்டு வந்திருந்த 5சவரன் பழைய தங்க நகைகளை மாற்றிக் கொண்டு அதே எடையில் 916 கேடிஎம் ரக தங்க நகைகளை வாங்கி சென்றுள்ளனர்.
இதனையடுத்து, அவர்கள் முதலில் சோதனைக்காக நகையை கொடுத்த போது அது 916 கேடிஎம் தரம் கொண்ட தங்க நகை என்பதை நந்தகுமார் உறுதி செய்துள்ளார். ஆனால் பின்னர் அந்த பெண்கள் அந்த நகையை பையில் போட்டு அதற்கு பதிலாக கவரிங் நகைகளை கொடுத்து ஏமாற்றி சென்றுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…