சென்னை: எழும்பூர் குந்தைகள் நல அரசு மருத்துவமனையில் மருந்தாளுனர் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றி வருபவர் ராஜன். இவர் திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்தவர்.
இந்நிலையில் இன்று வழக்கம் போல் பணிக்கு வந்தவர் மருந்து கொடுக்கும் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் ராஜனுக்கு இரு மனைவிகள் உள்ளனர் எனவும்,கருத்து வேறுபாடு காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…