மாணவிகள் உட்பட 40 பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த அரசு பள்ளி ஆசிரியர் ஒருவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் அவர் ஆசிரியை ஒருவருடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம், சிந்தனூர் தாலுகா சிங்கபுரா கிராமத்தில் அரசு உயர் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆசிரியராக பணியாற்றி வருபவர் முகமது அசாருதீன். இவர் கொப்பல் மாவட்டம் கரடகி டவுனில் வசித்து வந்தார். இந்த நிலையில், முகமது அசாருதீன், தன்னுடன் பணியாற்றும் ஆசிரியை ஒருவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
தற்போது இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ள நிலையில் அசாருதீன் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இவர் தன்னிடம் டியூசன் படிக்க வரும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ஆசிரியர் அசாருதீனை கைது செய்யவேண்டும் எனவும், அவரை ஆசிரியர் பணியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து கரடகி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முகமது அசாருதீனை வலைவீசி தேடி வருகிறார்கள். போலீசார் நடத்திய விசாரணையில் அவர், 40-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததும், பலரை மிரட்டி ஆபாசமாக வீடியோ எடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…