சேலம் மேட்டூரை சேர்ந்த 61 வயதான ரத்தினசாமி ஜூன் 11ஆம் தேதி கோர்பாவில் இருந்து கோயம்புத்தூர் வழியாக எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயிலில், சென்னையில் இருந்து பாலக்காடு நோக்கி தனது மகள் வீட்டுற்கு சென்றுள்ளார்.
அப்போது திருப்பூர் - கோயம்புத்தூர் இடையே ரயில் வந்தபோது அவரது பையில் வைத்திருத்த 10 பவுன் நகை மாயமானது. இதையடுத்து ரத்தினசாமி கோவை ரயில்வே காவல் துறையினரிடத்தில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்த் துறையினர், ஆய்வாளர் மீனாட்சி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த கோவை குறிச்சியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (41) என்பவரை பிடித்து விசாரித்த போது அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளார். அப்போது அவரிடம் மேற்கொண்ட சோதனையில் நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்கொண்ட விசாரணையில் பிடிக்கப்பட்ட அனைத்து நகைகளும் திருடியது தான் என ராஜேஷ்குமார் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரை கைதுசெய்த காவல்த் துறையினர், நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…