Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

தெரு நாய்களின் வெறிக்கு பலியான பச்சிளம் குழந்தை... துண்டு துண்டாக மீட்கப்பட்ட உடல்…

Gowthami Subramani Updated:
தெரு நாய்களின் வெறிக்கு பலியான பச்சிளம் குழந்தை... துண்டு துண்டாக மீட்கப்பட்ட உடல்…Representative Image.

கேரளாவில் நாய்கள் கடித்து குதறிய நிலையில் பச்சிளம் குழந்தையின் உடல் கிடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் கடந்த சில மாதங்களாகவே, நாய்கள் தொல்லை அதிகமாகக் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், எத்தனை வீடியோ காட்சிகளும் மனிதர்களை நாய்கள் கடித்தவாறும், கடிக்க முயற்சி செய்தவாறும் வெளிவந்தன.

இவ்வாறு நாய்கள் தொல்லை அதிகமாக இருந்த காரணத்தினால், குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் தவித்தனர். இதனால், தந்தை ஒருவர் குழந்தைகளை பள்ளிக்கு விட்டு வருவதற்கு, துப்பாக்கி ஒன்றை கையில் ஏந்தியவாறே சென்ற வீடியோ காட்சிகளும் வெளிவந்தன. இதனைத் தொடர்ந்து, நாய்களை பிடித்து செல்லுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த சூழ்நிலையில், நாய்கள் கடித்து குதற்கிய நிலையில், பச்சிளம் குழந்தையின் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தையின் உடலை திரூரிலுள்ள விவசாய நிலம் ஒன்றில் தெரு நாய்கள் கடித்துக் குதறிக் கொண்டிருந்தது. இதனைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள், நாய்களை விரட்டியடித்து, போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் பின், குழந்தையின் உடலை மீட்டு, பல்வேறு கட்ட சோதனையில் விசாரித்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்