திருச்சியில் காதல் திருமணம் செய்த 19 வயது இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளக்காடு தோகைமலை பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவருக்கு வயது 19 தான் ஆகிறது. ஆனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 21 வயதான அகிலா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். அகிலா தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில், இவர் தாயனூர் பகுதியில் உள்ள ஒரு வயல்வெளியில் சடலாமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்த நிலையில், போலீசார் வந்து பார்த்தபோது ஆகாஷின் தலை மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்துள்ளன. தடயங்களை சேகரித்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் போலீஸ் நடத்திய விசாரணையில் முதற்கட்டமாக ஆகாஷ் நேற்று இரவு அங்கு தனது 4 நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக தெரியவந்துள்ளது. மேலும் ஆகாஷுக்கு கஞ்சா இழுக்கும் பழக்கமும் இருந்து வந்துள்ளது.
இதனால் மது அருந்தியபோது ஏற்பட்ட மோதலில் நண்பர்களே கொன்றுவிட்டார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே ஆகாஷுடன் நேற்று இரவு மது அருந்திய நண்பர்கள் தலைமறைவாகிவிட்டதாகத் தெரிகிறது. இது போலீசாரின் சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது.
போலீசார் நண்பர்களை தேடி வருவதோடு மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…