ஏர்டெல் 5ஜி பிளஸ் நெட்வொர்க், ஏர்டெல் பயனர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நன்மைகளை வழங்கி வருகிறது. அதன் படி, தற்போது ஏர்டெல் 5ஜி பிளஸ் நெட்வொர்க்கை உபயோகப்படுத்தும் வகையில், வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் நேரத்தில் அளவற்ற 5ஜி டேட்டாவை அறிமுகப்படுத்தியதாக கூறியுள்ளது.
பார்தி ஏர்டெல் அதிவேக சேவையான 5ஜி சேவையை நாட்டில் 3000 நகரங்கள் மற்றும் நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் என அறிவித்துள்ளது. செப்டம்பர் 2023 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரம் மற்றும் முக்கிய கிராமப் பகுதிகளை இணைப்பது உறுதிப்பாடாக உள்ளது எனக் கூறியுள்ளது. மேலும், நாள்தோறும் 30-40 நகரங்கள் சேர்ப்பதைத் தொடர்கிறோம். மேலும், இந்த நெட்வொர்க்கின் சக்தியை அனுபவிக்க ஊக்குவிப்பதற்காக, தனது வாடிக்கையாளர்களுக்கு அளவற்ற 5ஜி டேட்டாவை அறிமுகப்படுத்தியதாக கூறியுள்ளது.
மேலும், மார்ச் 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள், தனது ஏர்டெல் 5ஜி சேவையை ஒவ்வொரு நகரத்திலும், முக்கிய கிராமப்புறங்களிலும் வழங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…