மெட்டா நிறுவனமானது வாட்ஸ்அப்-ல் ஒரு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட் குறித்த விவரங்களைப் பற்றி இதில் காணலாம்.
வாட்ஸ் அப் நிறுவனமானது, வாட்ஸ் அப் பயனர்களுக்கு உதவும் வகையில், புதிய புதிய அப்டேட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி, பலரும் எதிர்பார்த்த ஒரே அக்கவுண்டை நான்கு போன்களில் பயன்படுத்துமாறு அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சமானது, முன்னரே வாட்ஸ் அப் வெப் ஆப் மூலம் பயன்படுத்துமாறு அமைகிறது. இருப்பினும், மொபைல் போன்களைப் பயன்படுத்தி 4 போன்களில் தனித்தனியே பயன்படுத்துமாறு இந்த அம்சம் உள்ளது.
இந்த அம்சத்தைப் பொறுத்த வரை, ப்ரைமரி சாதம் பயன்படுத்தப்பட வில்லை என்றாலும், மற்ற சாதனங்களில் வாட்ஸ் அப்-ஐப் பயன்படுத்தலாம். அதே சமயம், 15 நாள்கள் மேல் ப்ரைமரி சாதனம் பயன்படுத்தப்படாமல் இருந்தால், மற்ற சாதனங்களில் வாட்ஸ் அப் தானாகவே லாக் அவுட் ஆகி விடும். இந்த நான்கு சாதனங்கள், 4 செல்போன்களாகவோ அல்லது லேப்டாப், கணினியைக் கூட பயன்படுத்தலாம்.
எவ்வாறு லிங்க் செய்யலாம்?
வாட்ஸ் அப் அக்கவுண்ட் ஒன்றை மற்ற சாதங்களுடன் லிங்க் செய்ய, Secondary போனில் வாட்ஸ் அப் எண்ணைப் பதிவிட வேண்டும். இப்போது, ப்ரைமரி போனில் வரக்கூடிய OTP-ஐ உள்ளிட்டு அதன் வாட்ஸ் அப் Code-ஐ ஸ்கேன் செய்து ஆக்டிவேட்செய்யலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…