இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களுள் ஒன்றான ஏர்டெல் நிறுவனத்தின் அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதுள்ளது. அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் நாளுக்கு நாள் தங்கள் திட்டத்தின் விலையை அதிகரித்து வருகின்றனர். அந்த வகையில், ரீசார்ஜ் பிளானின் விலையை சுமார் 57% வரை அதிகரித்துள்ளது.
ஏர்டெலின் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டம் ₹99-க்கு இதுவரை வழங்கப்பட்டது. இதற்கு 200 MB டேட்டா மற்றும் அழைப்புகளை வினாடிக்கு ₹2.5 பைசா என்ற விகிதத்தில் வழங்கியது. இந்த பிளானை தற்போது 57% வரை அதிகரித்து, தற்போது ரூ. 155/-க்கு வழங்குகின்றனர். இந்த திட்டத்திற்கு அன்லிமிடெட் கால், 1 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகிய வசதிகளுடன் ஹரியானா மற்றும் ஒடிசாவில், வழங்கத் தொடங்கியுள்ளது. இந்த திட்டம் வெறும் 24 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டி அளிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…