சாம்சங் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சாம்சங் கேலக்சி ஏ54 5ஜி எனும் ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிறுவனம் சாம்சங் கேலக்சி ஏ55 5ஜி ஸ்மார்ட்போன் தயாரிப்பில் கவனத்தை செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தயாரிப்பு நிலையில் இருப்பதால் இந்த ஸ்மார்ட்போனின் முழு விவரங்களையும் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. தற்போதெய்க்கு சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி ஸ்மாரட்போன் ஆனது எக்ஸிநோஸ் 1480 (Exynos 1480 SoC) சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அதிக செயல்திறன் மற்றும் கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற அனுபவத்தை அளிக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி இல் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே, 50எம்பி ரியர் கேமரா உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் அவ்வப்போது சில முக்கிய அம்சங்கள் பற்றிய தகவல்களை நிறுவனம் வெளியிட்டு வருகிறது. கூடிய விரைவில், சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி ஸ்மாரட்போனின் முழு விவரங்களையும் சாம்சங் நிறுவனம் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…