சீனாவை மையமாகக் கொண்டு நடைமுறையில் இருக்கும் "டிக்டாக்" செயலியை மொன்டானா சட்டத்திடம் தடை செய்வதாக அறிவித்துள்ளது.
டிக்டாக் Ban
மொன்டானாவில் உள்ள சட்டத்தை ஆதரிப்பவர்கள், சீன அரசாங்கம் TikTok இலிருந்து அமெரிக்க பயனர்களின் தரவைகளை அறுவடை செய்ய வாய்ப்புள்ளதாகவும், பெய்ஜிங்கிற்கு ஆதரவான தவறான தகவல் அல்லது செய்திகளை பொதுமக்களிடம் பரப்ப இந்த தளத்தைப் பயன்படுத்தலாம் என்றும் குறிப்பிகின்றனர். மேலும் பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் சீனாவின் கீழ் இயங்குவதால், டிக்டாக் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்று அமெரிக்க செனட்டில் உள்ள இருதரப்பு சட்டமியற்றுபவர்கள் மற்றும் எஃப்.பி.ஐ மற்றும் சி.ஐ.ஏ தலைவர்கள் தெறிவிக்கின்றனர்.
இதற்கு உதாரணமாக, சீனாவின் 2017 தேசிய புலனாய்வுச் சட்டத்தின் மூலம் மாநில உளவுத்துறை பணிகளுக்காக அந்நாட்டு அரசாங்கங்களுடன் ஒத்துழைக்க நிறுவனங்களை கட்டாயப்படுதியதை சுட்டிக்காண்பித்தனர்.
சட்டத்தை மீறினால் என்ன தண்டனை?
மொன்டானா மாநிலத்தில் டிக்டாக் பதிவிறக்குவதை சட்டபூர்வமாக தடைசெய்யயப்பட்டுள்ளது. அதனை மீறி எந்த ஒரு பயனரும் டிக்டாக்கை ஆப்ஸ் ஸ்டோர் அல்லது வேறேதேனும் வலைதளத்தில் இருந்து அணுகும் போதும் அந்த நிறுவனத்திற்கு ஒரு நாளைக்கு $10,000 அபராதம் விதிக்கப்படும். எனவே, ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு ஆப்ஸ்-களை டவுன்லோட் செய்ய உதவும் ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களே மீறல்களுக்கு பொறுப்பாகும். இந்த அபராதம் பயனர்களுக்கு பொருந்தாது என்றும் கூறப்படுகிறது. இந்த திட்டம் ஜனவரி 2024 முதல் அமல்படுத்தப்படும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…