ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் உள்ளன. இந்த ஒவ்வொரு ராசிக்கும் ஒரு பரிகார கோவில் உள்ளன. எனவே, அந்தந்த ராசிக்குரியவர்கள் தங்களுக்குரிய கோவில்களுக்கு வாழ்க்கையில் ஒருமுறையாவது சென்று வந்தால் வாழ்க்கையில் நிச்சயம் மாற்றங்கள் நிகழும் என்பது ஐதீகம். அந்தவகையில், 12 ராசிக்களுக்கும் உரிய ராசி கோவில்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
மேஷ ராசி கோவில்:
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாக கொண்ட மேஷ ராசியினரே! உங்க வாழ்க்கையில் தொடர்ந்து பணப்பிரச்சனைகளை சந்தித்தித்து கொண்டிருப்பீர்கள். அந்த சமயத்தில் ராமேஸ்வரம் மாவட்டத்தில் இருக்கும் இராமநாதசுவாமி கோவிலுக்கு ஒருமுறையாவது சென்று வழிபட்டு வந்தால் நிச்சயம் நல்ல மாற்றம் ஏற்படும். மேலும், கடன் பிரச்சனையில் சிக்கி தவிர்ப்பவர்கள் கூடிய விரைவில் அதிலிருந்து விடுபடுவர்.
ரிஷப ராசி கோவில்:
சுக்கிரனை ராசி அதிபதியாக கொண்ட ரிஷப ராசியினரே! நீங்கள் எவ்வளவு தான் முட்டிமோதினாலும் கைக்கு எட்டிய வாய்ப்புகள் வாய்க்கு எட்டாமல் போய்விடும். இந்த பிரச்சனையில் வெளியில் வர உங்க ராசிப்படி திருவிசநல்லூரில் உள்ள சிவயோகிநாதர் கோவிலுக்கு சென்று வாருங்கள். அப்படி முடியாதவர்கள் திருப்பதிக்கும் சென்று வரலாம். வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து தடைகளும் விலகி முன்னேற்றம் ஏற்படும்.
மிதுன ராசி கோவில்:
புதன் பகவானை ராசி நாதனாக கொண்ட மிதுன ராசியினரே! உங்க வாழ்க்கையில் அதிர்ஷ்டம் என்பது ஒருமுறை தான் கதவை தட்டும். அப்போதே பயன்படுத்தி கொள்ளாமல் பொறுமை பொறுமை என்று எல்லாவற்றையும் கைநழுவவிட்டு கவலையை சுமந்துக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் பழனி மலையில் இருக்கும் தண்டாயுதபாணி சுவாமியை வழிபட்டு வந்தால் கூடிய விரையில் நன்மை உண்டாகும்.
கடக ராசி கோவில்:
சந்திர பகவானை ராசி அதிபதியாக கொண்ட கடக ராசியினரே! நீங்கள் வெற்றியை நோக்கிய பயணத்தில் விடாமுயற்சியுடன் செயல்படுவீர்கள். அதேசமயம் இறுதிக்கட்டத்தை நெருங்கும்போது சோர்ந்துவிடுவீர்கள். இதுவே உங்களுடைய வாழ்க்கையில் பல விஷயங்களில் தோற்றுப்போக காரணம். இதை தவிர்க்க நீங்க திருந்துதேவன்குடியில் அருள் பாலிக்கும் கற்கடேஸ்வரரை ஒருமுறையாவது வழிபட்டு வந்தால் வெற்றி நிச்சயம். அப்படி முடியாதவர்கள் ராமேஸ்வரமும் சென்று வரலாம்.
சிம்ம ராசி கோவில்:
சூரியனை ராசி நாதனாக கொண்ட சிம்ம ராசியினரே! வாழ்க்கையில் எத்தனை தோல்விகளை சந்தித்தாலும், வெற்றியை நோக்கிய பயணத்தில் நிற்காமல் பயணத்திக் கொண்டே இருப்பீர்கள். நீங்கள் நினைத்தது நினைத்தப்படி நடக்க உங்க ராசிப்படி திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீவாஞ்சியம் கோவிலுக்கு ஒருமுறையாவது சென்று வாருங்கள்.
கன்னி ராசி கோவில்:
புதன் பகவானை ராசி அதிபதியாக கொண்ட கன்னி ராசியினரே! முன்ஜென்மத்தில் செய்த பாவங்களுக்கு இந்த ஜென்மத்தில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பீர்கள். எந்த காரியத்திலும் தடை, தாமதம். பணப்பிரச்சனை, குடும்ப சூழல் அனைத்தும் அடுத்தடுத்து துன்பத்தை கொடுக்கும். இவற்றையெல்லாம் சமாளிக்க வேண்டுமென்றால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள்.
துலாம் ராசி கோவில்:
சுக்கிரனை ராசி நாதனாக கொண்ட துலாம் ராசியினரே! உங்களுடைய நேர்மையே உங்களுக்கு பல இன்னல்களுக்கு ஆளாக்கும். அவற்றில் இருந்து தப்பிக்க நீங்கள் செல்ல வேண்டிய கோவில் திருத்தணியில் அருள் பாலிக்கும் முருகனை ஒருமுறையாவது சென்று வழிபாடு செய்துவிட்டு வாருங்கள். நிச்சயம் கெட்டது விலகி நன்மை ஏற்படும்.
விருச்சிக ராசி கோவில்:
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாக கொண்ட விருச்சிக ராசியினரே! வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்த பிறகே சந்தோஷத்தை பெறுவீர்கள். எந்த செயலும் தடை. விருப்பம் நிறைவேறாது, அப்படியே நிறைவேறினாலும் சில நாட்களே இருக்கும். ஒருசில சமயங்களில் வாழ்க்கையே வெறுக்கு அளவிற்கு சென்றுவிடுவீர்கள். இவற்றையெல்லாம் கடந்து வாழ்க்கையில் நன்மை அதிகரிக்க நீங்க காஞ்சிபுரத்தில் இருக்கும் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சென்று வாருங்கள்.
தனுசு ராசி கோவில்:
குரு பகவானை ராசி அதிபதியாக கொண்ட தனுசு ராசியினரே! எப்போதும் விதண்டாவாதம் பேசும் நீங்கள் மற்றவர்களின் கருத்துகளுக்கும் முன்னுரிமை கொடுப்பது, உங்களை அடுத்த படிக்கு அழைத்து செல்ல உதவி செய்யும் என்பதை உணர்ந்துக் கொள்ள வேண்டும். எத்தனையோ ஏமாற்றம், நெருக்கடியான சூழல் வாழ்க்கையில் சந்தித்திருப்பீர்கள். நீங்கள் மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோவிலுக்கு சென்றுவர அனைத்து துன்பங்களும் நீங்கி நல்ல காலம் பிறக்கும்.
மகர ராசி கோவில்:
சனி பகவானை ராசிநாதனாக கொண்ட மகர ராசியினரே! நீங்கள் செல்ல வேண்டிய ஆலயம் சிதம்பரத்தில் இருக்கும் தில்லை நடராஜர் சுவாமி திருக்கோயில். இங்கு சென்று வழிபட்டு வர, வாழ்க்கையில் இதுவரை சந்தித்த அனைத்து கஷ்டங்களும், துன்பங்களும் நீங்கி நல்ல மாற்றங்கள் உண்டாகும்.
கும்ப ராசி கோவில்:
சனி பகவானை ராசி அதிபதியாக கொண்ட கும்ப ராசியினரே! பணரீதியாக பல பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருப்பீர்கள். தொட்டதுகெல்லாம் செலவு வரும். எவ்வளவு சம்பாதித்தாலும் கைக்கு வரும் பணம் வந்த வேகத்திலேயே காணாமல் போய்விடும். இந்த பணப்பிரச்சனையில் இருந்து விடுபட நீங்க தேவிப்பட்டினத்தில் இருக்கும் திலகேஸ்வரர் கோவிலுக்கு ஒருமுறையாவது சென்று வாருங்கள். கடன் கடலில் மூழ்கியிருந்தாலும் கூடிய விரையில் வெளியில் வந்துவிடுவீர்கள்.
மீன ராசி கோவில்:
குரு பகவானை ராசி அதிபதியாக கொண்ட மீன ராசியினரே! நீங்க அனைத்து விஷயத்தையும் ஏற்ற இறக்கத்துடன் கையாள வேண்டிய நிலை ஏற்படும். கால் பங்கு நல்லது நடந்தாலும், முக்கால் பங்கு தீமையையே சந்திப்பீர்கள். இப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று வாருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…