Sun ,May 19, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

மதுராந்தகம் அருகே வீரநர்த்தன ஆஞ்சநேயர் திருக்கோவில் மகாகும்பாபிஷேக விழா

Baskarans Updated:
மதுராந்தகம் அருகே வீரநர்த்தன ஆஞ்சநேயர் திருக்கோவில் மகாகும்பாபிஷேக விழா Representative Image.

செங்கல்பட்டு: திருமலைவையாவூரில் உள்ள ஸ்ரீ அலமேலு மங்கை சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவிலுக்கு உட்பட்ட லட்சுமி கணபதி வீர நர்த்தன ஆஞ்சநேயர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருமலைவையாவூரில் உள்ள அறநிலை துறைக்கு சொந்தமான ஸ்ரீ அலமேலு மங்கை சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவிலுக்கு உட்பட்ட லட்சுமி கணபதி வீர நர்த்தன ஆஞ்சநேயர் திருக்கோவிலுக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

15ஆம் நூற்றாண்டு விஜயநகர சாம்ராஜ் மன்னரால் நிறுவப்பட்ட திருமலைவையா ஊரில் உள்ள ஸ்ரீ  அலமேலு மங்கைசமேதா ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவில் ஆகும். இக் கோயிலுக்கு உட்பட்ட ஸ்ரீ லட்சுமி கணபதி மற்றும் வீர நர்த்தன ஆஞ்சநேயர் திருக்கோயில் புனரமைப்பு பணிகள் கிராம மக்கள் ஒத்துழைப்புடன் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கடந்த 22 ஆம் தேதி கணபதி  ஹோமத்துடன் முதல் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலைகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து மூன்று நாட்கள் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.இன்றுயாகசாலை பூஜைகள் முடிவுற்று கும்பங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு கோயிலை வளம் வந்து கோயில் கோபுர புனித நீரூற்றி பட்டாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்