ஒவ்வொரு கிழமைகளும் ஒவ்வொரு தெய்வங்களுக்கு உரித்தானவை என்றே கூறலாம். அந்தவகையில், செவ்வாய் என்றால் முருகன், புதன் என்றால் விநாயகர், வியாழன் என்றால் சாய்பாபா, தட்சிணாமூர்த்தி போன்ற தெய்வங்களை வழிபடுவது சிறப்பு. இது போன்று அனைத்துத் தினங்களிலும், அந்த தினத்திற்கு உரித்தான தெய்வத்தை வழிபாடு செய்வது சிறப்பு பலன்களைத் தரும். அந்த வகையில், வியாழக்கிழமை தோறும் குரு தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வதால் கிடைக்கும் அதிசய பலன்களைப் பார்க்கலாம்.
குரு தட்சிணாமூர்த்தி
குருவுக்கு எல்லாம் குருவாகத் திகழ்பவரே குரு தட்சிணாமூர்த்தி. இவரை வணங்கினால், செய்த பாவங்கள் விலகி நன்மைகள் உண்டாகும். குரு பார்த்தால் கோடி புண்ணியம் என்றே கூறுவர். அதிலும், தேவர்களுக்கும், நவ கிரகங்களுக்கும் அதிபதியான குரு தட்சிணாமூர்த்தியை வனங்கினால், எவ்வித தோஷங்களும் விலகி சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
தட்சிணம் என்றால் தெற்கு என்பது பொருள். மேலும், பழந்தமிழ் இலக்கியங்களும் இவரைத் தென் திசை கடவுள் என்றே குறிப்பிடுகின்றன.
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி வழிபாடு பலன்கள்
நம்முடைய பாவங்கள் விலகி நன்மைகள் பிறக்கவும், வீட்டில் உள்ள கஷ்டங்கள் தூள் தூளாக மறையவும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பு மிக்கதாக அமையும். இவ்வாறு, ஸ்ரீ தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை தோறும் வணங்கி வருவதால் கிடைக்கக் கூடிய பலன்களைக் காணலாம்.
வீட்டில் தட்சிணாமூர்த்தி படம் வைத்து வழிபடலாமா.?
வீடுகளில் தட்சிணாமூர்த்தி படம் வைத்து வழிபடலாமா என்ற கேள்வி அனைவருக்கும் எழக்கூடிய ஒன்று. வீடுகளில் தாராளமாக தட்சிணாமூர்த்தி படத்தை வைத்து வழிபடலாம். வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வர, செல்வங்களை அள்ளித் தருவார் என்பது நம்பிக்கை.
வீட்டில், வியாழக்கிழமை தோறும் குரு தட்சிணாமூர்த்தி படத்திற்கு மஞ்சள் மலரால் அலங்காரம் செய்து வழிபடலாம்.
இவ்வாறு வழிபடும் போது, குரு தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம் உச்சரிப்பது சகல ஐஸ்வர்யங்களையும் அளிக்கும்.
மேலும் புதிய பணிகள், தொழில்கள் நோக்கி பயணிக்கும் நபர்கள், சகல கலைக்கும் வித்வானாக விளங்கும் குரு தட்சிணாமூர்த்தியை வணங்கும் போது அவை அனைத்தும் வெற்றியைத் தேடித் தரும்.
குரு தட்சிணாமூர்த்தி 9 வாரங்கள் வழிபாடு
குரு தட்சிணாமூர்த்திக்கு நெய்வேத்தியமாக மஞ்சள் நிற கொண்டைக்கடலை படைப்பது சிறப்பு. மேலும், இவற்றைத் தானமாக வழங்குவதன் மூலம் கிரக தோஷங்கள் நீங்கி விடும்.
பூஜையில் 9 இழைகள் கொண்ட மஞ்சள் நிற கயிற்றை வலது கையில் கட்டிக் கொள்ளலாம். இது போல், 9 வாரங்கள் செய்து வந்தால் வறுமை நீங்கி செல்வங்கள் பெருகும். மேலும், இதில் ஒன்பது வாரங்கள் முடிந்த பிறகு அந்த கயிரை அவிழ்த்து, ஓடும் நீரில் போட்டு விட்டால், வறுமை நீங்கி நன்மைகள் பிறக்கும் என்று கூறுவர்.
குரு தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்
யஸ்தே ப்ரஸன்னாமனுஸந்த தானோ!
மூர்திம் முதா முக்தசசாங்கமௌளி!
ஐஸ்வர்யமாயுர்லபதே ச வித்யா: மன்தே ச!
வேதாந்தமஹாரஹஸ்யம்!!!
இந்த மந்திரத்தை பூஜை அறையில், 9 முறை உச்சரித்து, மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை வீட்டிலேயே எளிமையாகச் செய்து நிறைய நற்பலன்களைப் பெறலாம். குரு தட்சிணாமூர்த்தி வழிபாடு அறிவாற்றலை மேம்படுத்தவும், உலகம் போற்றும் பேரும், புகழையும் தரும் என்றே கூறுவர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…