ஜோதிட ரீதியாக ஒருவருக்கு பிறந்த தேதி மற்றும் பிறந்த நட்சத்திரம் போன்று பிறந்த கிழமையும் அதிமுக்கியமானது. ஏனென்றால், ஒவ்வொரு கிழமையில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொருவிதமான குணம் இருக்கும். அந்தவகையில், குறிப்பிட்ட கிழமையில் பிறந்த நபர்களது குணநலன்கள் அவர்களுக்கு உண்டான பலன்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்களின் பலன்கள்:
சூரிய பகவானுக்கு உகந்த நாளான ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவர்கள் எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும் அதில் வெற்றி பெறாமல் ஓயமாட்டார்கள். அதாவது, அது எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் போராடி வென்றுவிடுவார்கள். எதிலும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையான குணமுள்ளவர்களாக இருப்பார்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் இவர்களுக்கு போட்டி மனப்பான்மை, ஆளுமைத்திறன் அதிகமாகவே இருக்கும். இவர்கள், சொல்வதைத்தான் செய்வார்கள் செய்வதைதான் சொல்வார்கள். கடினமான பணிகளையும் அசால்ட்டாக செய்யக்கூடியவர்கள். மற்றவர்களுக்கு உதவும் குணம் அதிகமாகவே இருக்கும்.
அதிர்ஷ்ட தேதிகள்: ஞாயிற்றுக்கிழமையுடன் 1, 10, 19, 28 ஆகிய தேதிகள் இணைந்திருக்கும் இந்த நாட்களில் எந்த புதிய முயற்சி எடுத்தாலும் வெற்றி கிட்டும்.
திங்கட்கிழமை பிறந்தவர்களின் பலன்கள்:
தன்னுடைய நகைச்சுவையான பேச்சு திறமையால் மற்றவர்கள் மனதில் எளிதில் இடம்பிடித்துவிடுவார்கள். பொறுமையின் சிகரமே என்றே சொல்லலாம். இளகிய மனம் கொண்ட இவர்கள் மற்றவர்களுக்கு தேடிப்போய் உதவி செய்வார்கள். எதிரிகளைக்கூட நண்பர்களாக கருதுவார்கள். இவர்களுக்கு நண்பர்கள் அதிகமாக இருப்பார்கள். வீட்டில் இருக்கும் நேரத்தைவிட நண்பர்களுடன் பொழுதுபோக்குவதில்தான் இவர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். தர்மம், நியாயம் போன்ற விஷயங்களை கடைபிடிப்பவர்கள். கற்பனை திறன் அதிகமாகவே இருக்கும். இதுதான் அவர்களின் சொந்த தொழிலுக்கும் பேருதவியாக இருக்கும். குளிர்ச்சியான தேகம் உடையவர்கள்.
அதிர்ஷ்ட தேதிகள்: திங்கட்கிழமையுடன் 2, 7, 11, 16, 20, 25 ,29 ஆகிய தேதிகள் இணைந்திருக்கும் இந்த நாட்களில் புதிய தொழில் தொடங்குதல், சுப நிகழ்ச்சிகள் செய்வது, பொன், பொருள் வாங்குவது போன்றவற்றை செய்வது சிறப்பு.
செவ்வாய் கிழமை பிறந்தவர்களின் பலன்கள்:
செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்கள் வம்புசண்டைக்குப் போக மாட்டார்கள். ஆனால், வந்த சண்டையை விடவும் மாட்டார்கள். அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறுபவர்கள் என்று சொல்லலாம். இருந்தாலும் சாதாரண விஷயத்திற்கும் அதிகளவு உணர்ச்சிவசப்படுவார்கள். ஆனால் கோபம் உள்ள இடத்தில்தான் குணம் இருக்கும் என்பது போல் இவர்களாகவே வலிய வந்து ஸ்நேகமாகி விடுவார்கள். நல்லவர்களுக்கு நல்லவர் கெட்டவர்களுக்கு கெட்டவராக திகழ்வார். அதனாலேயே பலருக்கும் இவரைப் பிடிக்காது ஆனால் அதைப்பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள். நியாய தர்மத்துக்கு கட்டுப்பட்டவர்கள்.
அதிர்ஷ்ட தேதிகள்: செவ்வாய் கிழமையுடன் 9, 18 ,27 ஆகிய தேதிகள் இணைந்திருக்கும் இந்த நாட்களில் புதிய முயற்சிகளை கையிலெடுத்தால் பல நன்மைகள் கிடைக்கும்.
புதன்கிழமை பிறந்தவர்களின் பலன்கள்:
இந்தக் கிழமைகளில் பிறந்தவர்கள் நல்ல அறிவாளியாக திகழ்வார்கள். எப்போது பார்த்தாலும் எதையாவது எழுதிக்கொண்டும் படித்துக்கொண்டும் இருப்பார்கள். தங்களுக்குத் தேவை இல்லையென்றாலும்கூட, அதை அறிந்து வைத்துக்கொள்வதில் அதிகம் ஆர்வமுள்ளவர்கள். இயல்பிலேயே கொஞ்சம் கூச்ச சுபாவமுள்ளவர்களாக இருப்பார்கள். நண்பர்களைத் தேர்ந்தெடுத்துத்தான் பழகும் குணம் உடையவர். இருப்பினும், பழகிவிட்டால் நட்புக்காக உயிரையும் கொடுப்பார்கள். ரகசியம் காப்பதில் வல்லவர் மற்றவர்களின் மனதில் உள்ளதைத் துல்லியமாக அறிந்து அதற்கேற்ப செயல்படுவார்கள். காரியம் நடந்துமுடிய வேண்டும் என்ரால் அதற்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள்.
அதிர்ஷ்ட தேதிகள்: புதன் கிழமையுடன் 5,14,23 ஆகிய தேதிகள் இணைந்திருக்கும் இந்த நாட்களில் புதிய முயற்சிகளை கையிலெடுத்தால் பல நன்மைகள் கிடைக்கும்.
வியாழக்கிழமை பிறந்தவர்களின் பலன்கள்:
வியாழக்கிழமையில் பிறந்தவர்கள், நன்நெறிகளுக்கு இருப்பிடமாகத் திகழ்வார்கள். அதனால், இவர்கள் பெரும்பாலும் தேவையில்லாத பிரச்னைகளில் அத்தனை எளிதாகச் சிக்கமாட்டார்கள். மற்றவர்களை போற்றத்தக்க குணம் கொண்டவர்களாக இருக்கும் இவர்கள், குறுக்கு வழியில் செல்பவர்களை திருத்தி நல்வழிப்படுத்துவார்கள். உதவி செய்யும் குணம் அதிகமாகவே இருக்கும். எந்த துறையில் ஈடுபட்டாலும் நிச்சயம் முன்னேற்றம் அடைவார்கள். இருந்த இடத்திலிருந்துகொண்டே எல்லா விஷயமும் அறிந்தவர்களாக இருப்பார்கள். இதனால் சிலர் இவரைக் கர்வம் பிடித்தவர் என்றுகூட நினைப்பதுண்டு.
அதிர்ஷ்ட தேதிகள்: வியாழக்கிழமையுடன் 3, 12, 21, 30 ஆகிய தேதிகள் இணைந்திருக்கும் இந்த நாட்களில் புதிய முயற்சிகளை கையிலெடுத்தால் பல நன்மைகள் கிடைக்கும்.
வெள்ளிக் கிழமை பிறந்தவர்களின் பலன்கள்:
இந்த கிழமையில் பிறந்தவர்கள் நல்ல பேச்சாற்றல் கொண்டவராக இருப்பார்கள். கலைத்துறையில் அதிக நாட்டம் கொண்டவர்கள். சமர்த்துப் பிள்ளை என்று பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். பேச்சாலேயே மற்றவர்களை தன்வயப்படுத்துவார்கள். வாழ்க்கை வாழ்வதற்கே என்று வாழ்பவர்கள். அதனால், தங்கள் மனதுக்கு எது பிடிக்கின்றதோ அதை எந்தச் சூழ்நிலையிலும் அடைந்தே தீருவார்கள். புகழ்ச்சியை விரும்பும் இவர்கள் எதையும் எல்லோரையும் எளிதாக நம்பி விடுவார்கள்.
அதிர்ஷ்ட தேதிகள்: வெள்ளிக் கிழமையுடன் 4, 8, 13 ,17 ,26 ,31 ஆகிய தேதிகள் இணைந்திருக்கும் இந்த நாட்களில் புதிய முயற்சிகளை கையிலெடுத்தால் பல நன்மைகள் கிடைக்கும்.
சனிக்கிழமை பிறந்தவர்களின் பலன்கள்:
இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் பொறுமைசாலி என்றே சொல்லலாம். தூங்கினால் கும்பகர்ணன், எழுந்து நின்றால் இந்திரஜித் போன்றவர்கள். சோம்பலும், தள்ளிப்போடுவதும் இவர்களது பிறவிக்குணம். எதிலும் ஒரு அலட்சியப் போக்கு எதைப் பற்றியும் கவலைப்படாத மனம் படைத்தவர்களாக இருப்பார்கள். நண்பர்களுக்காக எதையும் செய்யக் கூடியவர்கள். வேலை என்று வந்து விட்டால் அதை முடித்து விட்டு மற்ற வேலைகளைத் துவங்குவார்கள். எப்பொழுதும் தான் உண்டு தன் வேலை உண்டு என நினைப்பவர்கள். அதனாலேயே இவரைப் பலரும் விரும்புவார்கள்.
அதிர்ஷ்ட தேதிகள்: சனிக்கிழமையுடன் 8, 17, 26 ஆகிய தேதிகள் இணைந்திருக்கும் இந்த நாட்களில் புதிய முயற்சிகளை கையிலெடுத்தால் பல நன்மைகள் கிடைக்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…