குரு பெயர்ச்சி கடந்த ஏப்ரல் மாதம் நிகழ்ந்தது. மேஷ ராசியில் ராகு உடன் குரு கூட்டணி சேர்ந்துள்ளார். இந்த நிலையில் வருகின்ற செப்டம்பர் 05 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை மேஷ ராசியிலேயே குரு வக்ரமடையப்போகிறார். குரு பகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9 இடங்களை பார்வையிடுகிறார். பொதுவாக குரு பகவான் ராசியில் அமரும்போதோ அல்லது 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் அமரும் போதோ முதல்தர குரு பலம் வந்துவிட்டதாக கூறப்படும். அதேபோல், 3, 8, 10 ஆகிய இடங்களில் அமரும் போது இரண்டாம் தர குரு பலம் வந்துவிட்டதாக கூறப்படும்.
அந்தவகையில், இந்த வக்ர குரு பெயர்ச்சியின் மூலமாக மீனம், மிதுனம், மேஷம், துலாம், சிம்மம், தனுசு ராசிக்காரர்களுக்கு அற்புதமான குருபலம் கூடிவந்துள்ளது. இதனால் சிங்கிள்ஸ் ஆக இருந்த இந்த ராசிக்காரர்களுக்கு திருமணம் யோகம் கூடிவரப்போகிறது. அதேபோல புத்திர பாக்கியமும் தேடி வரப்போகிறது. மேலும் என்னென்ன பலன்களை தரப்போகிறார் என்பதை பார்க்கலாம்.
உங்க ராசியில் ஜென்ம குருவாக அமரும் குரு பகவான், உங்க ராசிக்கு 5, 7, 9 ஆகிய இடங்களை பார்க்கிறார். இதனால், மேஷ ராசியினருக்கு திருமணம் கைகூடி வரும். எப்போதும் சண்டை, சச்சரவுமாக இருந்த திருமணம் வாழ்க்கையில் அன்பும், பாசமும் அதிகரித்து உறவு உற்சாகமடையும். குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
உங்க ராசிக்கு குரு பகவான் ஐந்தாம் வீட்டில் அமர்ந்து ஒன்பதாம் பார்வையாக உங்க ராசியை பார்வையிடுகிறார். இதை குடும்ப குரு என்பார்கள். இதனால், குடும்பத்தில் உற்சாகம் ஏற்படும். தசாபுத்தி நன்றாக இருந்தால் திருமண யோகமும் கை கூடி வரும். அதேப்போல புத்திர பாக்கியமும் கிடைக்கப் போகிறது.
உங்க ராசிக்கு குரு ஏழாம் இடத்தில் அமர்ந்து உங்கள் ராசியை பார்ப்பதால் மனதிற்குப் பிடித்த மனைவி அமைவார். கணவன் மனைவி இடையே இருந்த பிரிவினை நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு பூர்வ ஜென்ம புண்ணியத்தின்படி மனதிற்கு பிடித்த வாழ்க்கைத்துணை அமையும்.
குருபகவான் மிதுனம் ராசிக்கு லாப ஸ்தானத்தில் அமர்ந்து ராசிக்கு 3, 5, 7ஆம் இடங்களை பார்வையிடுகிறார். ராசிக்கு ஏழாம் வீட்டை களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் இதுவரை தடைப்பட்ட திருமணம் நடக்கும். மேலும், திருமணம் ஆகியும் நீண்ட காலமாக புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான பிராப்தி கிட்டும். சிலருக்கு காதலன்/காதலியையே வாழ்க்கைத் துணையாக அமைய வாய்ப்புள்ளது.
பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்துள்ள குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால், மனதிற்கு பிடித்த வாழ்க்கைத்துணை அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும், குடும்ப சூழ்நிலையால் இதுவரை பிரிந்திருந்த கணவன், மனைவி மீண்டும் ஒன்று சேருவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு. ஒருதலையாக காதலித்தவந்தவர்களுக்கு கிரீன் சிக்னல் கிடைக்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…