Tamilnadu News Live : சென்னை எச்டிஎப்சி வங்கி கிளையிலிருந்து வாடிக்கையாளர்கள் வங்கி கணக்குகளில் தவறுதலாக 13 கோடி வரவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை தி.நகர் பர்கிட் சாலையில் செயல்பட்டு வரும் எச்டிஎப்சி வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த எச்டிஎப்சி கிளை வங்கியில் கணக்கு வைத்துள்ள 100 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளுக்கு 13 கோடி அளவில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.
13 கோடி வரவு
இதனையடுத்து, அதிக அளவில் பணம் வரவு செய்யப்பட்ட எச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த தவறை கண்டறித்த எச்டிஎப்சி வங்கி கிளை உடனடியாக பணம் வரவு செய்யப்பட்டுள்ள வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது. மேலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பணம் வங்கி கணக்குகளில் வரவானதா என அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் இந்த பணம் திரும்ப எடுத்த பிறகு சம்பந்தப்பட்ட வங்கி கணக்குகள் வழக்கம் போல செயல்படும் என அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…