டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்குவதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தார். இந்நிலையில், திடீரென அந்த முடிவை கைவிடுவதாக அறிவித்த நிலையில் எலான் மஸ்க் மீது டுவிட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்நிலையில், எலான் மஸ்கை சந்தித்த செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அப்போது, மேலும் பிரச்சனையை அதிகப்படுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, தற்போது நீதிமன்றத்தில் டிவிட்டர் நிறுவனத்தின் மீது எலான் மஸ்க் வழக்கு தொடர்த்துள்ளார். மேலும், இது தொடர்பாக 164 பக்க ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இதனால் இந்த பிரச்சனை மேலும் சர்ச்சையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…