சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2வது நாளாக உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.424 உயர்ந்து ரூ.38,160'க்கு விற்பனையாகிறது. மேலும் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.53 அதிகரித்து ரூ.4,770க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று ரூ.1.90 காசுகள் உயர்ந்து ரூ.66.30க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களாக தங்கம் விலை குறைந்து வந்த தங்கம் விலை தற்போது மீண்டும் அதிகரித்து வருவது நகைப்பிரியர்களுக்கும் நடுத்தரக் குடும்பத்தினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…