Cylinder Rate Increases: வீட்டு உபயோகத்திற்காகப் பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை உயர்ந்ததால் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு தகுந்த படியே, உள்நாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்டவைகளுக்கான விலையை நிர்ணயிக்கின்றன. சர்வதேச கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருக்கும் பட்சத்தில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகமாகும். அதன் படி, கடந்த சில மாதங்களாகவே எரிபொருள்களின் விலை அதிகமாகி வருகிறது (Cylinder Rate Increases).
பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாகவே மாற்றமின்றி வருகிறது. ஆனால், இதற்கு மாறாக சிலிண்டர்களின் விலை அதிகரித்துக் கொண்டு வருகிறது. குறிப்பாக, தற்போது வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கை ரூ.1000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. கடந்த மே மாதம் 7 ஆம் நாள் சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டது. இதனால், ரூ.965 -க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர் விலை ரூ.1,015 ரூபாயாக உயர்ந்துள்ளது. பின்னர், மே மாதம் 19 ஆம் நாள் அன்று, ரூ.3.50 காசுகள் உயர்த்தி ரூ.1,018.50 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது (Cylinder Rate Today in Tamil).
இந்த நிலையில், தற்போது மேலும் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.50 உயர்த்தியுள்ளது. அதன் படி, தற்போது வீட்டு பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்தப்படும் சிலிண்டரின் விலை ரூ.1,068.50 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.8.50 குறைந்து 2,177.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை 187 ரூபாயாக குறைத்துள்ளது (Cylinder Rate High Today).
மேலும், வீட்டுப்பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயரும் எனக் கூறப்பட்டு வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…