ஏற்ற இறக்கத்துடன் கூடிய தங்கத்தின் விலை, நேற்றைய நாளைத் தொடர்ந்து இன்றும் அதிகமானதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உள்ளனர்..
கடந்த சில நாள்களாகவே, தங்கத்தில் விலை சரிந்து வந்த நிலையில், கடந்த வாரத்தின் இறுதியில் இருந்து, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறையும் தங்கத்தின் விலையை விட ஏறக்கூடிய தங்கத்தின் விலையே அதிகமாக உள்ளது.
இன்றைய தினத்தில் அதாவது அக்டோபர் 05 ஆம் நாளின் நிலவரப்படி, ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு கிராமிற்கு ரூ.60 அதிகரித்து, 4,835 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.480 அதிகரித்து 38,680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல, 24 காரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 5,237 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தூய தங்கம் (24 காரட்) ஒரு சவரனுக்கு 41,896 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலையும் இன்று ஏற்றம் கண்டுள்ளது. அதன் படி, ஒரு கிராமிற்கு 0.30 காசுகள் அதிகரித்து, ரூ.67.00 காசுகளாகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 67,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை மூன்றே நாள்களில் 1,040ரூ உயர்ந்துள்ளதால், இல்லத்தரசிகள் கவலையில் உள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…