ரிலையன்ஸ் ஜியோவின் இயக்குநர் பதவியில் இருந்து முகேஷ் அம்பானி நேற்று ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியை ரிலையன்ஸ் நிறுவன இயக்குனர் குழுவின் தலைவராக நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஆகாஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோவின் நான் எக்சிகியூடிவ் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் ஜூன் 27, 2022 முதல் ஐந்தாண்டு காலத்திற்கு ரிலையன்ஸ் ஜியோவின் நிர்வாக இயக்குநராக பங்கஜ் மோகன் பவாரை நியமிப்பதற்கும் இயக்குனர் குழு இன்று ஒப்புதல் அளித்தது.
ட்ராய் தரவுகளின்படி, இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ, ஏப்ரல் மாதத்தில் 16.8 லட்சம் மொபைல் சந்தாதாரர்களைப் பெற்று சந்தையில் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…