பிரதான வங்கியாக செயல்படும் Yes பேங்க் தனது புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட பிராண்ட் லோகோவை கடந்த செவ்வாய் கிழமை வெளியிட்டது. இது நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Yes பேங்க் ஆனது, புதிய லோகோவை துடிப்பான லோகோவை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு பறவை உண்ணி உயருவது போல அமைப்பைக் கொண்டுள்ளது. இது வங்கியின் தற்போதைய உயர்ந்த நிலையை பிரதிபலிப்பதாக உள்ளது என நிறுவனம் தெரிவித்துள்ளது. பழைய லோகோவுடன் ஒப்பிடும் போது, புதிய லோகோவில் அதன் கார்னர் பகுதிகள் மென்மையாக்கப்பட்டு, அதன் விளிம்புகளை மாற்றியுள்ளது. இது நீலம் மற்றும் சிவப்பு நிறங்களைக் கொண்டதாக அமைகிறது.
Yes பேங்க் ஆனது, ஒவ்வொரு நிதி விஷயத்திற்கும், முழுமையான தீர்வு வழங்குபவராக இருப்பதில் வங்கி முக்கிய மையமாக விளங்குகிறது. இதன் புதுப்பிக்கப்பட்ட அடையாளம், வங்கி தலைமையகம், டிஜிட்டல் தளங்கள், தயாரிப்புகள் மற்றும் தகவல் தொடர்புப் பொருள்கள் என முழுவதிலும் பரவியுள்ளது.
இந்த வங்கியானது, தனிநபர் கடன்கள், வர்த்தக நிதி, கார்ப்பரேட் மற்றும் வணிக வங்கி சேவைகள், வங்கி டெபாசிட்கள் போன்ற சேவைகளை வழங்குகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…