பிப்ரவரி மாதம் தொடங்கி தமிழகம் மட்டும் அல்லாது இந்தியா முழுவதும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்றது. அவற்றுள் CBSE, ICSE, ISC ஆகியவை அடங்கும். அதில் CBSE 10 ஆம் வகுப்பிற்கான தேர்வு பிப்ரவரி 15, 2023 ஆரம்பித்து மார்ச் 21, 2023 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தாண்டு 19 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது.
நடந்து முடிந்த பொதுத் தேர்வின் முடிவுகள் மே 12, 2023 அன்று வெளியானது. அதன் அடிப்படையில் இந்தியா முழுவதும் CBSE கல்வியில் பயின்ற மாணவர்களின் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களில் 93.12 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தகவல் வெளியானது. இந்த பதிவில் தமிழகத்தில் அதிகப்படியான மதிப்பெண் எடுத்த மாணவர்களின் பட்டியலை காண்போம்.
பெயர் |
சதவிதம் |
மாவட்டம் |
வி அஸ்வின் |
99.4 |
கோயம்புத்தூர் |
ஸ்ரீஹரி சுப்ரமணியன் ராவ் |
98.8 |
ஈரோடு |
A முகமது அஷ்பக் |
98.6 |
சென்னை |
சிரஞ்சீவி எஸ்.எஸ் |
98.2 |
சென்னை |
கர்ணிகா ராஜன் |
97.4 |
கோயம்புத்தூர் |
ஸ்ரீநிதி பி |
96.8 |
சென்னை |
தற்போது வரை அதிகாரபூர்வமான CBSE 10 ஆம் வகுப்பு மாணவர்கள் முடிவின் டாப் 10 பட்டியல் வெளியிடப்பட வில்லை. மேலே குறிப்பிட்ட பட்டியாலானது தமிழகத்தில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களின் பட்டியல். ஏதேனும் தவறுகள் இருந்தால் எங்களுடைய வலைத்தளத்திற்கு எந்த சம்மந்தமும் இல்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறோம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…