சப் கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாளாகும்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 22 ஆம் தேதி கடைசி நாள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருப்பதால், கடைசி நேரத்தில் சர்வர் கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளைத் தவிர்க்க, இதுவரை விண்ணப்பிக்காத தேர்வர்கள் உடனடியாக விண்ணப்பித்து விடுங்கள் என அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் குரூப் 1 தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டுமானால், அதற்கு ஆகஸ்டு 27 ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
அப்போது பிழை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…