Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இரண்டு லாரிகளுக்கு இடையே சிக்கி கோர விபத்து; 6 பேர் சம்பவ இடத்தில் பலி! 

Kanimozhi Updated:
இரண்டு லாரிகளுக்கு இடையே சிக்கி கோர விபத்து; 6 பேர் சம்பவ இடத்தில் பலி! Representative Image.

மதுராந்தகம் அருகே கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில்  டாடா ஏசி வாகனத்தில் சென்னையை நோக்கி 10 பேர் சென்றுள்ளனர். அப்போது ஜானகிபுரம் பகுதியில் முன்னே சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது டாடா ஏசி வாகனம் மோதியுள்ளது. 

இதனால் டாடா ஏசி வாகனம் நிலைகுலைந்த சமயத்தில், பின்னால் வந்த மற்றொரு சரக்கு லாரியும் மோதியுள்ளது. இரண்டு வாகனங்களுக்கும் சிக்கிய டாடா ஏசி வாகனம் முற்றிலும் சிதைந்த நிலையில், அதில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். படுகாயம் அடைந்த 4 பேர் சிகிச்சைக்காக அருகேயுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. 

அதிகாலை சுமார் 4 மணி அளவில் நிகழ்ந்த இந்த விபத்தால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.   காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கோவிலுக்குச் சென்று டாட்டா ஏசியில் திரும்பிய பொழுது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்