Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி நினைவிடம் முன்பு கிடந்த மர்ம சூட்கேஸால் பரபரப்பு

Baskaran Updated:
ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி நினைவிடம் முன்பு கிடந்த மர்ம சூட்கேஸால் பரபரப்பு Representative Image.

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடம் அருகே சூட்கேஸ் ஒன்று கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ளது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடம். இங்கு அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் சூட்கேஸ் ஒன்றை பிற்பகலில் வீசி எறிந்து விட்டுச் சென்றார். அந்த சூட்கேஸை மெட்டல் டிடெக்டர் கொண்டு சிஆர்பிஎப் வீரர்கள் சோதனை செய்த போது, அதிலிருந்து எச்சரிக்கை ஒலி எழுந்ததால், அதிர்ச்சியடைந்தனர்.

உடனே அந்த பகுதி முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு தீவிரமாக சோதனை செய்யப்பட்டது. பின்னர் மோப்ப நாய் உதவியோடு, தடயவியல் நிபுணர்கள் சூட்கேஸை திறந்தனர். அதில் மிளகாய் பொடி, பேஸ்ட் உள்ளிட்டவை மட்டும் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்