செங்கல்பட்டு மாவட்டம் அச்சரபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடப்பாக்கம் கிராமத்தில் அரசு ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த மாதம் முதல் மாணர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது.
தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரிக்கும் காரணத்தினால், பள்ளிகளை தாமதமாகத் திறக்க அரசு உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் நேற்றுடன் பள்ளி விடுமுறை முடிந்த நிலையில் இன்று ஆரம்பப் பள்ளிகள் திறக்கப்பட்டது.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். 2023 -2024 கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் கூடப்பாக்கம் அரசு ஆரம்ப பள்ளிக்கு ஆர்வத்துடன் வந்தனர்.
அவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் பொன்னாடை போர்த்தி மலர் கொடுத்து வரவேற்றார். மேலும் முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். இதில் பள்ளி ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்கள் தினந்தோறும் பள்ளி சீருடையில் வருவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…