கோவையில் பாட்டி வீட்டில் வசித்து வந்த 17 வயது சிறுமியை பாதிரியார் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மலுமிச்சம்பட்டியில் 17 வயது சிறுமியும் அவரது தங்கையும் பாட்டியுடன் பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர். அதே பகுதியைச் சேர்ந்த பாதிரியார் ஸ்டீபன் ராஜ் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வாராவாரம் வெள்ளிக்கிழமை ஜெபம் செய்து வருகிறார்.
மேலும் அந்த பாதிரியார் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் ஊர் ஊராகச் சென்று ஜெபக்கூட்டம் நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்நிலையில் நேற்று சிறுமி உள்ள பகுதிக்கு ஜெபம் செய்ய வந்துள்ளார்.
இந்நிலையில் பாதிரியார் அந்த பகுதியில் இருக்கும்போது, பாட்டி தனது இரண்டு பேத்திகளையும் வீட்டிற்குள் வைத்து தாளிட்டுவிட்டு கடைக்கு சென்றுள்ளார். இதை நோட்டம் விட்ட பாதிரியார் வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்று சிறுமியின் தங்கையை ஒரு தனி அறையில் போட்டு பூட்டி விட்டு, 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
அதற்குள் சிறுமி கத்தி கூச்சலிடவே பயந்துபோன பாதிரியார் அக்கம்பக்கத்தினர் திரண்டால் சிதைத்துவிடுவார்கள் என்ற பயத்தில் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓட்டம் பிடித்துவிட்டார். இதற்கிடையே பாட்டி வந்தவுடன் சிறுமி நடந்த அனைத்தையும் கூறியுளளார்.
இதையடுத்து பேரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் பாதிரியார் ஸ்டீபன் ராஜை அழைத்து உரிய முறையை விசாரணை நடத்தியதில் நடந்த அனைத்தையும் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…