தென்காசி ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தில் பால் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. அங்கு, ஒரு கிணறு வெட்ட முடிவு செய்து, அப்பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரை அணுகியுள்ளார். அவரிடம் ஒப்பந்த அடிப்படையில் கிணறு வெட்டும் பணியை ஒப்படைத்தார். இதனையடுத்து கிணறு வெட்டும் பணி 10 நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று பாறைகளை தகர்ப்பதற்காக டெட்டனேட்டர்களை பயன்படுத்தி வெடி வைக்கும் சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடி வெடித்ததில், பணியில் இருந்த 4 பேரில் அரவிந்த் (21) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரழந்தார். மேலும், விபத்தில் படுகாயமடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஆசிர் சாம்சன் (22) என்பவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், 2 பேர் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி ராஜலிங்கம் என்பவரும் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிணறு வெட்டும்போதும் வெடி வெடித்து 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…