Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஈரோட்டில் செங்கல் சூளைகள் மூடல்... தவிக்கும் 5 ஆயிரம் தொழிலாளர்கள்...

Muthu Kumar August 01, 2022 & 11:50 [IST]
ஈரோட்டில் செங்கல் சூளைகள் மூடல்... தவிக்கும் 5 ஆயிரம் தொழிலாளர்கள்... Representative Image.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் தயாரிக்கப்படும் செங்கள்களை சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், புஞ்சை புளியம்பட்டி, ஈரோடு, கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், இதனை தயாரிக்கும் செங்கள் சூளைகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் நடக்கும் செய்திகளை அன்றாடம் உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது வாட்ஸ் அப் குழுவில் இணையுங்கள்

இதனையடுத்து, செங்கல் சூளைகளுக்கு தேவைப்படும் மண் எடுக்க கடந்த சில மாதங்களாக தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. இதனால் பெரும்பாலான செங்கல் சூளைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மண் தீர்ந்த நிலையில் செங்கள் தயாரிக்கும் பணியை நிறுத்தி வைத்துள்ளனர்.
 
மேலும், செங்கல் சூளைகளில் தயாரிக்கப்படும் செங்கலுக்கான மண் எடுக்க கனிமவளத்துறை அனுமதி வழங்காத நிலையில், சத்தியமங்கலம் சுற்று வட்டாரத்தில் செயல்படும் செங்கல் சூளைகளில் பணிபுரியும் 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையை இழந்து தவித்து வருகின்றனர்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்