ஈரோடு கிழக்குத் தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா இளம் வயதிலேயே மரணமடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரான இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா. இவர், தமிழக காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளராக இருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் பி.ஏ.பொருளாதாரம் படித்துள்ளார். இவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.
இவருக்கு இன்று காலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால், ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். ஆனால், இன்று மதியம் இவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தது அரசியல் கட்சியினர்களுக்கும், உறவினர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத் துறையின் தலைவராக பதவி வகித்தார். அதன் பிறகு தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளராக உள்ளார். 2021-ல் நடந்த சட்ட சபைத் தேர்தலில் அ.தி.மு.க-விற்கு எதிராகப் போட்டியிட்டு 8,523 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் இவரது மறைவு அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…