நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உலக சாதனைக்காக 102 மாணவ, மாணவிகள் மூன்றரை மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள சின்னப்ப நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் குமார் இவர் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பாட்ட கலையை இப் பகுதியில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
மேலும் இந்த மாணவர்களை கொண்டு சிலம்பாட்ட பயிற்சி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் தமிழகத்தில் சிலம்பாட்டக்கலை மென்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கத்திலும் சிலம்பாட்டம் குறித்து குமாரபாளையம் பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் சாகச நிகழ்ச்சிகளாக நடத்தி வருகிறார்.
இதன் ஒரு தொடர்ச்சியாக இன்று 102 மாணவ மாணவியர் கலந்து கொண்ட தனியார் நிறுவனமான நோபல் அவார்டு உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் 102 மாணவ மாணவிகள் தொடர்ச்சியாக மூன்றரை மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…