பவானி நகராட்சியில் 27 வார்டுகளில் திமுக சார்பில் 20 கவுன்சிலர்களும், அதிமுக சார்பில் 4 பேரும், கம்யூ கவுன்சிலர் ஒருவரும், சுயேட்சை கவுன்சிலர் ஒருவரும் உள்ளனர். மேலும், பவானி நகரமன்ற தலைவராக திமுகவின் சிந்தூரி இளங்கோவன் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், நேற்று (மே24, புதன்கிழமை) நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமையில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக கவுன்சிலர்களான கவிதா, சுப்பிரமணி, கார்த்திகேயன், ரவி உள்பட 23 பேர் கலந்துக் கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும், அதிகாரிகளின் செயல்பாடுகளை கண்டித்தும், நகரமன்ற தலைவர் மதிப்பதில்லை என்றும், நகராட்சி ஒப்பந்த பணிகளை அவருடைய உறவினர்களுக்கு தருவதாகவும், வார்டில் போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில்லை என்றும் திமுக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். மேலும், பவானி நகராட்சி வளர்ச்சிக்கு எந்த பணிகளையும் மேற்கொள்ளாமல் ஒதுக்கி வைத்து முதல்வர் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் விதமாக நடந்துக் கொள்வதாகவும் நகரமன்ற தலைவர் மீது குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து திமுகவின் ஒன்பது கவுன்சிலர்களும், கம்யூ. கட்சியை சேர்ந்த இருவரும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நகரமன்ற துணை தலைவர் மணி, நகரமன்ற தலைவரின் செயல் குறித்து தமிழக முதல்வருக்கு தகவல் கொடுத்து இருப்பதாக தெரிவித்தார். திமுக நகரமன்ற தலைவரை திமுகவினரே குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…