Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஈரோட்டில் பரபரப்பு..! மத்திய படை வீரர்கள் குவிப்பு!

Gowthami Subramani Updated:
ஈரோட்டில் பரபரப்பு..! மத்திய படை வீரர்கள் குவிப்பு!Representative Image.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல், வரும் பிப்ரவரி 27 ஆம் நாள் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்குதல் திரும்பபெறும் அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து, வேட்புமனு தாக்குதல் பெற்று இறுதியாக 77 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

குறிப்பாக இந்த தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிட உள்ளார். மேலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா, அதிமுகவின் வேட்பாளராக தென்னரசு, தேமுதிக போன்றவை போட்டியிடுகிறது.
 

ஈரோட்டில் பரபரப்பு..! மத்திய படை வீரர்கள் குவிப்பு!Representative Image

தற்போது, தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்த நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் முக்கியக் கட்சிகளின் நிர்வாகிகள் முற்றுகையிடத் தொடங்கி விட்டனர். இதனால், ஈரோடு கிழக்குத் தொகுதி முழுவதும் திருவிழா போன்று காட்சியளிக்கிறது. இந்நிலையில், இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 2 கம்பெனி மத்திய படை வீரர்கள் ஈரோடுக்கு வந்தடைந்தனர். அதன் படி, ரயில்வே பாதுகாப்பு படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை என 2 படைகளைச் சேர்ந்த 180 வீரர்கள் வந்தனர்.

முன்னரே, ஆளும் கட்சியான திமுகவினர் தொடர்ந்து விதிமீறல் முறைகேடுகளில் ஈடுபடுவதால், துணை ராணூவம் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்ததாகக் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்