சபரிமலை சென்று திரும்பிய ஐயப்ப பக்தர்கள் கோர விபத்தில் சிக்கி மரணமடைந்த சம்பவம் தேனி பகுதியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகேயுள்ள சண்முகசுந்தரபுரத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் குழு ஒன்று, சபரிமலை தரிசனத்திற்காக காரில் சென்றுள்ளனர். சிறுமி உட்பட மொத்தம் 11 பேர் தரிசனம் முடித்துவிட்டு காரிலேயே சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.
நேற்று நள்ளிரவு கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் மலைப்பாதையான குமுளி-லோயர்கேம்ப் மலைப்பாதையில் மாதா கோவில் அருகே வந்து கொண்டிருந்த போது, அங்கிருந்த பாலத்தில் மோதி கட்டுப்பாட்டை இழந்த கார் 40 அடி பள்ளத்தில் பாய்ந்துள்ளது. பெரியார் அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் ராட்சத இரும்பு குழாய்கள் மீது தலைகுப்பற விழுந்தது விபத்துக்கு உள்ளானதில், கோயிலுக்குச் சென்ற 7 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடன் சென்ற சிறுமி உட்பட 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் ஆண்டிப்பட்டியை சேர்ந்த நாகராஜ், தேவதாஸ், சிவக்குமார், சக்கம்பட்டியை சேர்ந்த முனியாண்டி, மறவபட்டியை சேர்ந்த கன்னிசாமி, சண்முகசுந்தரபுரத்தை சேர்ந்த வினோத் உள்ளிட்ட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…