Tue ,Apr 16, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

14 நாட்களே ஆன பெண் சிசு அழுகிய நிலையில் மீட்பு.. தேனியில் பகீர் சம்பவம்!!

Sekar Updated:
14 நாட்களே ஆன பெண் சிசு அழுகிய நிலையில் மீட்பு.. தேனியில் பகீர் சம்பவம்!!Representative Image.

தேனி மாவட்டத்தில் பிறந்து 14 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக, போலீசார் பிரேதத்தை தோண்டி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் ராமச்சந்திரன்-ரம்யா எனும் தம்பதிக்கு ஏற்கனவே 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், ரம்யா மீண்டும் கர்ப்பம் தரித்து, கடந்த நவம்பர் 29 ஆம் தேதி மற்றொரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இந்நிலையில், 4 நாட்களுக்கு முன்பு ரம்யாவின் வீட்டிற்கு சென்ற அங்கன்வாடி ஊழியர் குழந்தைக்கு தடுப்பூசி தடுப்பூசி போடும்படி அறிவுறுத்தி உள்ளார். ஆனால் தங்கள் மகள் டிசம்பர் 12ஆம் தேதி அன்று மூச்சு திணறி உயிரிழந்து விட்டதாகவும், சிசுவின் சடலத்தை வீட்டின் அருகேயே புதைத்து விட்டதாகவும் ரம்யா கூறியுள்ளார்.

இது குறித்து அங்கன்வாடி ஊழியர் மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, சிசுவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சமூகநலத்துறை அலுவலர் சியாமளா தேவி போலீசில் புகார் அளித்தார்.  இதையடுத்து வருவாய் அதிகாரிகள் முன்னிலையில் பெண் சிசுவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மீண்டும் அதே இடத்தில் புதைக்கப்பட்டது.

தற்போது பிரேத பரிசோதனை முடிவுக்காக அதிகாரிகள் காத்துக்கொண்டுள்ளனர். அறிக்கை வந்த பிறகு தான் குழந்தையின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்றும், அதன் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்