Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குப்பைத் தொட்டியில் கிடந்த கை…! கிணற்றில் கிடந்த உடல்..! உச்சகட்ட பரபரப்பில் கோயம்புத்தூர்...

Gowthami Subramani September 21, 2022 & 12:40 [IST]
குப்பைத் தொட்டியில் கிடந்த கை…! கிணற்றில் கிடந்த உடல்..! உச்சகட்ட பரபரப்பில் கோயம்புத்தூர்...Representative Image.

கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூரில் துண்டிக்கப்பட்ட கை ஒன்று குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உடல் கிணற்றில் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவர் கோவை மாவட்டத்தில் அழகு நிலைய ஊழியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு இவரைத் தொடர்பு கொள்ள முடியாததால், ஈரோட்டில் இருந்த பிரவுவின் மனைவி காவல் நிலையத்திடம் புகார் அளித்துள்ளார்.

துண்டு துண்டாக வெட்டப்பட்ட பொன் நாவரசு.. இந்தியாவை உலுக்கிய கொடூர சம்பவமும் பின்னணியும்..

அந்த சமயத்தில், குப்பைத் தொட்டியில் வெட்டப்பட்ட கை ஒன்று கிடப்பதாக காவல் நிலையத்திற்குத் தகவல் வந்தது. இதனையடுத்து, பிரவுவின் மனைவியாரிடம் வெட்டப்பட்ட கையை உறுதி செய்வதற்குக் காண்பித்தனர். இது குறித்து நடைபெற்ற விசாரணையில் இவரது கை தான் எனக் கண்டறியப்பட்டது.

அழகு நிலையத்தில் பணியாற்றி வந்த பிரபுவின் செல்போன் கடந்த செப்டம்பர் 15 ஆம் நாளில் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இது குறித்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில் பிரபுவின் உடல் எங்கே உள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியானது. இந்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு கண்டறிந்ததில், இறந்த பிரபுவின் உடல் பாகங்கள் துடியலூர் சந்தை அருகேஉள்ள கிணற்றில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கோயம்புத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்