கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2018ல், தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகளை உடைப்போம் என பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கோவையில் தபெதிக-வினர் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் எச்.ராஜாவை கண்டித்து தபெதிக-வை சேர்ந்த கோபால், ஜீவானந்தம், கவுதம் ஆகிய மூன்று பேரும் 2018 மார்ச் மாதம், கோவை விகேகே மேனன் சாலையில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசினர்.
இது தொடர்பாக காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் 3 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சசிரேகா உத்தரவிட்டார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…