அரசு மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டு வேலை ஜெனரேட்டர் வேலை செய்யாததால், கர்ப்பிணி பெண் ஒருவர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி, பிரசவித்த பின் உயிரிழந்துள்ளார். மின்தடை ஏற்பட்டதால், அரசு மருத்துவமனையிலிருந்து தனியார் மருத்துவமனைக்கு அலைக்கழிக்கப்பட்டு, பிரசவத்திற்கு பிறகு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்னூர் அரசு மருத்துவமனையில் வான்மதி என்ற பெண் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். இவருக்குக் கடந்த 21 ஆம் தேதியன்று, அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென மின்தடை ஏற்பட்டு, ஜெனரேட்டரும் வேலை செய்யாமல் போனது. இதனால், அறுவை சிகிச்சை மேற்கொள்ள இயலாததால், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த நிலையில், வான்மதியின் உடல்நிலை மோசமானது. இதனால், தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வான்மதியின் உடல்நிலை மோசமாகி உயிரிழந்தார். இதனையடுத்து, அந்தப் பெண்ணின் உறவினர்கள், அரசு மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டு ஜெனரேட்டர் இயங்காததால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. மேலும், தனியார் மருத்துவமனையிலும் சரியான முறையில் சிகிச்சை அளிக்காததால் இறந்துள்ளார் என உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…