பயணிகள் காத்திருக்கும் அறையில் குளிரூட்டும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களுக்கு பயணிக்கும் பயணிகள் ரயில் நிலைய குளிருட்டப்பட்ட காத்திருக்கும் அறையில் குளு குளு வசதியுடன் ரயிலுக்காக எதிர்பார்த்திருக்கலாம்.
முன்னதாக கடந்த 2020ம் ஆண்டு ஏற்கனவே இருந்த பயணிகள் காத்திருக்கும் அறையில் செயல்பட்டு வந்த குளிரூட்டும் வசதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கொரோனா உச்சத்தில் இருந்த சமயங்களில் அந்த அறை பூட்டப்பட்டு, பயணிகள் உள்ளே செல்லாத வகையில் இருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்திருப்பதால், இந்த அறை மீண்டும் சரி செய்யப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
பயணிகள் தங்களது மகிழ்ச்சியான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இனி திருநெல்வேலி ரயில் நிலையத்துக்கு நீங்கள் ரயிலுக்காக காத்திருக்க நேர்ந்தால் குளு குளு வசதியுடன் ரயிலை எதிர்பார்த்து காத்திருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…