திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே அமைந்துள்ளது முதுமொத்தன்மொழி, ஆனைகுடி நாடார்கள், ஆனை பேரன் நாடார் மற்றும் கோனார் வகையறாக்களுக்கு பாத்தியப்பட்ட பூரண கலா சமேத பிறவி பெருமாள் ஐயன் கோவில். இந்த கோவிலில் ஆடிப் பெருக்கு நாளான நேற்று ஆடிப் பெருக்கு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
முன்னதாக கணபதி ஹோமத்துடன் துவங்கி விழா, இறைவனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை, ஊஞ்சல் உற்சவம், சுமங்கலி பூஜை உள்ளிட்டவை அடுத்தடுத்து தொடர்ந்து நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட சுமங்கலிப் பெண்களுக்கு தாம்பூலத் தட்டில் மஞ்சள் கயிறு, குங்குமம், வளையல், வெற்றிலை, பாக்கு, விபூதி உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டன. விழாவின் இறுதி நிகழ்ச்சியாக வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் நடைபெற்றது. பலரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…