ஆகஸ்ட் 3, 2023 அன்று தமிழகத்தின் சில மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
சேலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடையெழு மன்னர்களில் ஒருவரான வல்வில் ஓரி விழாவினை முன்னிட்டு வாயூரம் ஆகஸ்ட் 3 ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு அம்மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.
அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்களில் அரசு கருவூலம் மற்றும் முக்கிய அலுவலங்களில் குறிப்பிட்ட ஊழியர்கள் மட்டும் வேலை செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…