Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வாழப்பாடி அருகே உணவு துறை அதிகாரி போல் நடித்து மோசடி: போலீசார் விசாரணை

Baskar Updated:
வாழப்பாடி அருகே உணவு துறை அதிகாரி போல் நடித்து மோசடி: போலீசார் விசாரணைRepresentative Image.

சேலம்: வாழப்பாடி அருகே வெள்ளாள குண்டம் பகுதியில் உணவுத்துறை அதிகாரி போல் நடித்து மளிகை கடை உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை மிரட்டி  பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வெள்ளாள குண்டம் பகுதியில் வசித்து வருபவர்  பழனிச்சாமி இவர் அதே பகுதியில்  மளிகை கடை மற்றும் உரக்கடை  நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் காலை  கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த பொழுது திடீரென கடைக்குள் புகுந்த மர்ம ஆசாமி உணவுத்துறை அதிகாரி என  கூறி உங்கள் கடையில் சட்டவிரோதமாக ஹான்ஸ் புகையிலை இருப்பதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாகவும்  தகவலின் பேரில் சோதனை இட வந்துள்ளோம் எனக் கூறி மிரட்டி உள்ளார்.

சட்டவிரோதமான ஹான்ஸ் புகழைப் பொருட்களை வீட்டில் வைத்து விற்பனை செய்து வருவதாக கூறி உங்கள் வீட்டில் சோதனை செய்ய வேண்டும் என மளிகை கடை உரிமையாளரை  வீட்டிற்கு அழைத்துச் சென்று உங்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஹான்ஸ் புகையிலை எடுங்கள் என மிரட்டும் தோனியில்  பேசியதை கண்டு  மிரண்டு போன கடை உரிமையாளர்  எங்களிடம் எந்த பொருளும் நாங்கள் விற்பதில்லை எனக் கூறியுள்ளார்.

மேலும் மிரட்டி ஆசாமி மளிகை கடை உரிமையாளரை உங்கள்  மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க 70 ஆயிரம் ரூபாய்  தரவேண்டும் என் ௯றி உரிமையாளரிடம் இல்லையென்றால் 50,000 கொடுத்தால் விட்டு விடுவேன் என மிரட்டி  வியாபாரியிடம  50 ஆயிரம் ரூபாயை  வாங்கிக் கொண்டு திருட்டு அதிகாரி ஒருவரின்சென்று உள்ளான். பணத்தை பறி கொடுத்த மளிகை கடை உரிமையாளர் அதிர்ச்சி அடைந்ததை எடுத்து உடனடியாக அவர் சம்பந்தப்பட்ட உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரியிடம் தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டபோது, உளவுத்துறை பாதுகாப்பு அதிகாரி போர் மர்ம சாமி நடித்து பணத்தை தேடிச் சென்றது தெரிய வந்தது இதனை அடுத்து மளிகை கடை உரிமையாளர் வாழப்பாடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் உணவுத்துறை அதிகாரி போல் கொள்ளையடித்து தலை மறைவான மர்மநபர் விசாரணையில் பல இடங்களில் கொள்ளை அடித்த நபர் என தெரியவந்துள்ளது. மளிகை கடை உரிமையாளரை உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரி போல் நடித்து மிரட்டி ஐம்பதாயிரம் ரூபாய் கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்