Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பக்ரீத் பண்டிகை எதிரொலி - வீரகனூர் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

Saraswathi Updated:
பக்ரீத்  பண்டிகை எதிரொலி - வீரகனூர் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை! Representative Image.

சேலம்  மாவட்டம்  வீரகனூரில்  வாரந்தோறும்  சனிக்கிழமையன்று கால்நடைச் சந்தை நடைபெறுகிறது. மாவட்டத்திலேயே  மிகப்பெரிய  சந்தையாக இங்கு, சேலம்  மாவட்டமின்றி, வெளிமாவட்டங்களில் உள்ள விவசாயிகளும் வெள்ளாடுகள், செம்மறி  ஆடுகள், மேச்சேரி  இன  ஆடுகள், மாடுகள்  உள்ளிட்டவற்றை விற்பனைக்காக கொண்டுவருகின்றனர்.  

தமிழகத்தில் பக்ரீத் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், வீரகனூரில்  நடைபெற்ற  கால்நடை சந்தையில் ஆடு, மாடுகளை  விற்பனை  செய்வதற்காக  ஏராளமான விவசாயிகள்  சுமார்  ஐந்தாயிரம் ஆடுகளையும், 500க்கும்  மேற்பட்ட மாடுகளையும்  கொண்டுவந்திருந்தனர்.  

அதிகாலை முதலே ஆடு, மாடுகளை வாங்குவதற்காக  ஆத்தூர், வாழப்பாடி, தலைவாசல், சேலம், தம்மம்பட்டி , தேனி, துறையூர், உள்ளிட்ட  பகுதிகளை  சேர்ந்த  நூற்றுக்கணக்கான  வியாபாரிகள்  மற்றும்  இறைச்சி  கடைக்காரர்கள், இஸ்லாமியர்கள்  என குவிந்ததால் கால்நடை சந்தை களைகட்டியது.

இந்த சிறப்புச் சந்தையில், ஆடுகளின் விற்பனை விலை வழக்கத்தைவிட 500 முதல் ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்ததோடு, 60 கிலோ எடை கொண்ட போயர் இன ஆடு ஒன்று 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்தச் சந்தையில், சுமார் மூன்று கோடி  ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்ற நிலையில், தங்களது கால்நடைகளுக்கு நல்ல விலை கிடைத்ததாக விவசாயிகளும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்