வாழப்பாடியில் வேலை கேட்பது போல் நடித்து பட்டப்பகலில் மூதாட்டியை கட்டிப்போட்டு நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற ஒரு பெண் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த கவரக்கல்பட்டியை சேர்ந்தவர் மூதாட்டி ராணி. இவரது மூத்த மகன் வெற்றிவேல் வாழப்பாடியில் உள்ள அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனையில் மெக்கானிக் டெக்னீஷியனாகவும், இளைய மகன் வெங்கடேஷ் சேலத்தில் உள்ள தனியார் கார் நிறுவனத்திலும் பணிபுரிகின்றனர். மூதாட்டியின் வீட்டுக்கு நேற்று சென்று இருவர் வேலை கேட்டனர்.
அப்போது, காலையில் வேலைக்கு வருமாறு ராணி அறிவுறுத்தினார். ஆனால் அவர்கள் மதியம் இரண்டு மணிக்கு வந்தனர். அப்போது மூதாட்டி மட்டும் இருந்த நிலையில் அவரை கத்தியை காட்டி மிரட்டி சேலையால் கட்டிப்போட்டனர். தொடர்ந்து மூதாட்டி அணிந்திருந்த தோடு, மோதிரம், சங்கிலி என, 6 பவுன் நகைகளை கழற்றிக்கொண்டனர். பின்னர் வீட்டில் இருந்த, 25,000 ரூபாய், அங்கிருந்த இரு உண்டியல் களை உடைத்து, அதிலிருந்த பணத்தையும் எடுத்துக்கொண்டு, இருவரும் தப்பிவிட்டனர். இதுகுறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஷாகின், முஸ்தாபா, பிரகாஷ் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…