Virudhunagar District News : சிவகாசி அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிவகாசி அய்யப்பன் கோவில்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அய்யப்பன் சங்கத்துக்கு பாத்தியப்பட்ட அய்யப்பன் காலனியில் உள்ள அய்யப்பன் கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 12-ம் தேதி தொடங்கியது. அன்று காலை 8 மணிக்கு மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. மாலையில் வாஸ்து சாந்தி தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
பூஜை
இதனை தொடர்ந்து, 13-ம் தேதி காலை 9 மணிக்கு கோ பூஜை நடைபெற்றது. மேலும் மாலை 5 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு இரண்டாம் கால பூஜை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மூன்றாம் கால பூஜை நடைபெற்றது.
நெய்குடம்
இந்நிலையில், நேற்று காலை 6 மணிக்கு பால்குடம், நெய்குடம் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து விழாவை சிறப்பித்தனர். மேலும் 8 மணிக்கு நான்காம் கால பூஜை நடைபெற்றது. காலை 10.36 மணிக்கு புனிதநீர் கலசங்களில் கொண்டு வரப்பட்டது. பின்னர் காலை 11.31 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அன்னதானம்
இதனைத்தொடர்ந்து, 12 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்காரம், தீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் கோவிலுக்கு வருகை புரிந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை அருள்மிகு ஸ்ரீ அய்யப்பன் சங்க நிர்வாகிகள், நிர்வாகிகள் மற்றும் சபரிமலை யாத்திரை பக்தர்கள் செய்திருந்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…